இலங் கையில் நீண்டகாலமாக நிலவிய யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும்,ஏனைய முக்கிய பிரச்சினைகளுக்கு சரியான வழியில் தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் வன்முறைகள் எழும் அபாயம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும், தீர்வு காணப்பட வேண்டிய பல பிரச்சினைகள் எஞ்சியிருப்பதாக தாம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சுட்டிக்காட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்தோர் முகாம்களில் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை மீளக் குடியமர்த்த அரசாங்கம் காட்டி வரும் அக்கறை வரவேற்கத்தக்கதென அவர் குறிப்பிட்டுள்ளார்.தாம் அண்மையில் முகாம்களுக்கு விஜயம் செய்திருந்த போது நிலமைகளை நேரில் அவதானித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனிதாபிமானப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் மக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் கவனம் செலுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.