இலங் கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவரக்கூடிய வகையில் விசேட வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினூடாக நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
புலிகளைத் தோற்கடித்ததன் மூலம்; வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைத்து வருவதில் காணப்பட்ட சிக்கல் நிலைமை தற்போது நீங்கியுள்ளது. இலங்கையில் பல்வேறு துறைகளில் தொழில்வாய்ப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. சுற்றுலாத்துறையை மேம்படுத்தி, அதன்மூலம் பெறப்படும் வருமானத்தை 6 சத விகிதத்தால் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மேலதிக ஏற்றுமதிப் பயிர்களை செய்கை பன்னுவதற்குரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.