தோட்டங்கள் தோறும் டெங்கு விழிப்பூட்டும் நிகழ்ச்சி திட்டம்

dengu_1.gifதோட் டங்கள் தோறும் டெங்கு பற்றி விழிப்பூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தினை விரைவில் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினரும், இ.தொ.கா. உப தலைவருமான கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.  பதுளை மாவட்டத்திலுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கிடையே மேற்படி டெங்கு நுளம்பு தொடர்பான அறிவூட்டும் கருத்தரங்கு மற்றும் இதர நடவடிக்கை தொடர்பான விடயங்களை அந்த தோட்ட முகாமையாளர்களுடன் கலந்தாலோசித்து நடத்தவும், மரணங்களை ஏற்படுத்தும் நுளம்பு ஒழிப்பு தொடர்பான செயற்திட்டம் முன்னெடுக்கப்படும்.

நுளம்புகள் பெருகும் இடங்கள், அன்றாடம் சுத்திகரிக்கப்பட வேண்டிய இடங்கள் மற்றும் இந்த நுளம்பால் ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் முறை போன்ற விடயங்களை நேரடியாக தோட்ட லயன்களுக்குச் சென்று அறிவூட்டவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அறிவூட்டும் நிகழ்ச்சிகளுக்கு இ.தொ.காங்கிரஸ் காரியாலயங்கள் மூலமும் கல்வி அமைச்சின் மூலமும் பூரண அனுசரணை கிடைக்கும் என கே.விஸ்வநாதன் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *