இலங்கைக்கான இந்தியத் தூதுவர் நிவாரண கிராமங்களுக்கு விஜயம் – அரசாங்கம் வழங்கியுள்ள வசதிகளுக்குப் பாராட்டு

aloka_prasad.jpgஇலங் கைக்கான இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்தார். மெனிக்பாம் கதிர்காமர் நிவாரணக் கிராமம் உட்பட பல நிவாரணக் கிராமங்களுக்கும் அவர் சென்று பார்வையிட்டதுடன் மக்களுடன் கலந்துரையாடினார். இந்தியா வழங்கியுள்ள நடமாடும் மருத்துவ மனைக்கும் விஜயம் செய்த இந்திய தூதுவர் இந்திய டாக்டர்களுடனும் உரையாடினார்.

இந்தியா அனுப்பிவைத்துள்ள மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றையும் பார்வையிட்ட தூதுவர் பற்றாக்குறை தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இலங்கை அரசு வழங்கியுள்ள வசதிகள் குறித்து பாராட்டுத் தெரிவித்த அவர்,  இந்தியா தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *