உலக பங்கு சந்தையின் பட்டியலில் இலங்கைக்கு 8 ஆவது இடம். 2009ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் இன்று வரை 518 வீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக இலங்கை பிணைகள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் உதயசிறி காரியவசம் தெரிவித்தார். இலங்கையில் 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ள நிலைமையே பங்குச் சந்தையின் வளர்ச்சி திடீரென அதிகரித்தமைக்கு பிரதான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.