யாழ். மாநகரசபைக்கான தேர்தலில் தாங்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக த.வி. கூ. தலைவர் வீ ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியில் உள்ள கட்சிகள் இதற்கு இணக்கம் தெரிவித்தால் அவர்களுக்கும் இடமளிக்கப்படும் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தமது ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோரை வவுனியாவில் சந்தித்துக் கலந்துரையாடியபோது தெரிவித்துள்ளார்.
thevi
உதயசூரியன் தோற்பது நிச்சயம். மகிந்தவுடன் போகப்போகின்றவர்களுக்கும் வெற்றி நிச்சயமில்லை.
மாயா
உங்கள் உபதேசம் அடுத்தவனுக்கு மட்டும்தானா சங்கரி. நீங்களும் சேர்ந்து போய் காட்டுங்கோ.
thurai
உதயசூரியனே புலிச் சின்னமாக மாறித் தமிழர்களிற்கு இவ்வளவு அழிவுகளையும் தந்தது. வட்டுக்கோட்டைத் தீர்மான்ம் இன்னமும் புலிகளின் வாயிலிருந்து ஓயவில்லை. இனியாவது தமிழர்களிற்கிடையே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை பழக்கிவிட்டால் அடுத்த சந்ததியாவது
நிம்மதியாக வாழும்.
துரை