வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் மூலம் வட மாகாணத்தை துரிதமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீன், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் மற்றும் வட மாகாண ஆளுநர் டிக்சன் தெல ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலில் வவுனியா மாவட்டத்துக்குட்பட்ட சகல பிரதேச செயலாளர்களும் கலந்துகொண்டதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.