வன்னியில் இருந்து இடம்பெயர்ந்தோரின் சுகாதார வசதிகளை மேம்படுத்த உலக வங்கி 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளதாகவும், இது தொடர்பான கூட்டம் நேற்று திருமலையிலுள்ள மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்றதாகவும், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம். தேவராஜன் தெரி வித்தார்.
கிட்டத்தட்ட 220 மில்லியன் ரூபா நிதியை வழமையாக வழங்கி வரும் சுகாதார அபிவிருத்தித் திட்டத்திற்கு மேலதிகமாக வழங்க முன்வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இன்றைய நிதி வழங்கல் சம்பந்தமான விசேட கூட்டத்தில் வடக்கு, கிழ க்கு பிரதம செயலாளர்கள், கிழக்கு சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதி திட்டமிடல் செயலாளர்கள், மாகாண சுகாதாரப் பணிப்பாளர்கள், நிதி ஆணைக்குழுவின் தலைவர், பணிப்பாளர், ஆலோசகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.