வடக்கு வசந்தத்தின் கீழ் வவுனியா நிவாரணக் கிரா மங்களில் தங்கியுள்ள மக்களுக்கென இலவச கண் சிகி ச்சை முகாம்களை நடாத்துவதற்கு ஸ்டேண்டட் சார்ட்டட் வங்கி ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதற்கு முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சுடன் ஸ்டேன்டட் சார்ட்டட் வங்கிப் பிரதி நிதிகள் இணக்கப்பாட்டு உடன்படிக்கையிலும் கைச் சாத்திட்டுள்ளார்கள்.
இந்நிதியுதவியின் மூலம் இலவச கண் சிகிச்சை முகாம்களை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கொண்டுள்ளார். கண் சிகிச்சை முகாம்களில் கண் பரிசோதனை, மூக்கு கண்ணாடி வழங்குதல் உட்பட கண்ணோடு தொடர்பான குறைபாடுகளுக்குத் தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ளவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.