வட பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் 57 ஆயிரத்து 293 சிறுவர்கள் இருப்பதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் யு.எல்.எம்.ஹால்டீன் தெரிவித்துள்ளார்.
இவர்களில் ஆயிரத்து 34 சிறுவர்கள் பெற்றோரை இழந்தவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இவர்களைத் தவிர இந்த முகாம்களில் 7 ஆயிரத்து 894 விதவைகளும் 3 ஆயிரத்து 100 கர்ப்பிணித் தாய்மார்களும் உள்ளனர்.
அதேவேளை முகாம்களில் காயமடைந்தவர்கள் 11 ஆயிரத்து 873 பேரும் ஊனமுற்றவர்கள் 3 ஆயிரத்து 968 பேரும் உள்ளனர். இடம்பெயர்ந்த மக்களிடையே 3 ஆயிரத்து 689 பேர் அரச அதிகாரிகள் உள்ளனர் எனவும் ஹால்டீன் தெரிவித்துள்ளார்.