பஹ்ரேனுக்கு செல்வதற்கு ‘ஸ்பொன்சர்’ தேவையில்லை – ஒகஸ்ட் மாதம் முதல் அமுல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்று பஹ்ரேன் செல்லும் இலங்கையர்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நேரடியாக அவர்களுக்கே விசா வழங்கும் நடைமுறையை பஹ்ரேன் அரசு நடைமுறைப் படுத்தவுள்ளது.

இதுவரை காலமும் பஹ்ரேன் செல்லும் இலங்கையரை அந்நாட்டில் பொறுப்பேற்பதாக உத்தரவாதமளிக்கும் (ஸ்பொன்சர்) நபர் ஊடாகவே விசா வழங்கப்பட்டு வந்தது.

இனிமேல் அந்த நடைமுறை பின்பற்றப்படாமல் இலங்கையிலிருந்து செல்லும் நபரை பஹ்ரேன் அரசே பொறு ப்பேற்கும் வகையில் அனுசரணையாளர் அல்லது உத்தர வாதமளிக்கும் நபரின் பெயரில் விசா வழங்கப்படமாட் டாது.

இந்த நடைமுறையினால் இலங்கையிலிருந்து செல்லும் நபர் சுதந்திரமாக தொழில்புரிய முடியும். தான் வெளியே செல்வதாயினும் உத்தரவாதமளிக்கும் நபரின் அனுமதி பெற்றே வெளியே செல்ல வேண்டும் என்ற நிலையும் இனிமேல் ஏற்படமாட்டாது. தொழில் புரியும் இடங்களிலும் அவருக்குரிய உரிமையும் கிடைக்க வழிவகை ஏற்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார். பஹ்ரேன் போன்று சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் போன்ற நாடுகளும் இவ்வாறான விசாக்களை விரைவில் வழங்கவுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *