வடக்கு கிழக்கின் யுத்த வெற்றிக்கு உயிர்களை அதிகளவு தியாகம் செய்தவர்கள் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த படையினரே என்று மாகாண கிராமிய கைத்தொழில் அமைச்சர் நெரன்சன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாவத்தகமவில் நடைபெற்ற படையினரைப்பாராட்டிய வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், வடமேல் மாகாணத்தில் இருந்து 3 ஆயிரம் படையினர் யுத்தத்தில் தமது உயிர்களைத்தியாகம் செய்துள்ளனர்.
மாவத்தகமவில் 153 இராணுவ வீரர்கள் உயிர் இழந்துள்ளனர். கல்கமுவவில் 600 பேர் உயிரிழந்துள்ளனர். நிக்கவரெட்டிய, ஆனமடுவ போன்ற பிரதேசங்களில் அதிகமான இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளார்கள். இதனால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாவத்தகம மூவின மக்களும் ஒன்றிணைந்து வாழும் பிரதேசமாகும். ஏனைய பகுதிகளுக்கு ஒற்றுமையை வலியுறுத்திக் காட்டக் கூடிய ஒரு முன் மாதிரியான பிரதேசமாக இந்த பிரதேசம் விளங்குகிறது. சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் இன்று வரை எந்தவிதமான இனப்பாகுபாடுமின்றி வாழ்கிறார்கள் என்றார்.