பேராசிரியர் கிருஷ்ணராஜாவின் மறைவுக்கு தமிழ்ச்சங்கம் அனுதாபம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ்.கிருஸ்ணராஜாவின் மறைவுக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியில்;

தமிழ் மொழியில் மெய்யியல் கல்வியை வளர்த்தெடுப்பதற்கு பலவழிகளிலும் தொண்டாற்றியவர் பேராசிரியர் எஸ்.கிருஸ்ணராஜா. மெய்யியலிலும் இந்துத் தத்துவத்திலும் பல அரிய நூல்களை எழுதியுள்ளார்.

தமிழியலை நவீனப்படுத்துவதற்கு அவர் பெரும் தொண்டாற்றியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டபீடம், கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இயங்குவதற்கு துணைவேந்தருடன் இணைந்து பெரும் பணியாற்றி, தமிழ் மாணவர்களின் சட்டக்கல்வி வளர்ச்சிக்கும் பேராசிரியர் பெரும் தொண்டாற்றியுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மட்டுமன்றி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர்களுக்கும் அவர் பெரும் தொண்டாற்றியுள்ளார்.  அன்னாரின் மறைவுக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *