வடக்கில் மீட்கப்பட்டுள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் புதிதாக அமைக்கப்பட்ட இரு பாதுகாப்புத் தலைமையகங்களுக்கு இரண்டு புதிய கட்டளைத் தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி பாதுகாப்புத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஷன்ன குணதிலகவும் முல்லைத்தீவு பாதுகாப்புத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் நந்தண உடவத்தவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நியமனங்கள் இன்று முதல் அமுலுக்கு வருவதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.