நிவாரணக் கிராமங்களில் சிறந்த பணி; அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதி

maninda-with-us-delication.jpgஇடம்பெயர்ந்த மக்களுக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள நலன்புரி முகாம்கள் சிறந்த முறையில் நடத்தப்படுவதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதி ஹீத் சுலர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் கூறப்பட்டதற்கும் முகாம்களின் நிலவரத்தை நேரில் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளதாக நேற்று (29) நாடு திரும்புவதற்கு முன்னர் கொழும்பு – ஹில்ரன் ஹோட்டலில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் சுலர் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இந்தத் தருணத்தில் மிக முக்கியமானதென்றும் அவர் கூறினார்.

இலங்கையின் உண்மை நில வரத்தைக் கண்டறியும் பொருட்டு அரசின் அழைப்பின் பேரில் காங்கிரஸ் பிரதிநிதி ஹீத் சுலர் தலைமையிலான குழுவினர் கடந்த 26 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்தனர். அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரசூரிய மற்றும் தூதரகத்தின் அதிகாரிகளும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

வவுனியா நலன்புரி முகாம்களுக்குச் சென்று நிலைமைகளை அவதானித்த இந்தக் குழுவினர் இடம்பெயர்ந்த மக்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து கொண்டனர். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிரேஷ்ட அமைச்சர்கள் ஆகியோரைச் சந்தித்த இந்தக் குழுவினர் யுத்த நிறைவின்போது நாடு எதிர்கொண்ட நிலைமை களைப் புரிந்து கொண்டனர். மேலும் பாதுகாப்புச் செய லாளர் கோத்தாபய ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, வெளிவிவகாரச் செயலாளர் கலாநிதி பாலித கொஹன ஆகியோரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்களது விஜயத்தின் நிறைவாக கொழும்பு – ஹில்ரன் ஹோட்டலில் நேற்றுக்காலை செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினர். இதில் மேலும் கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் பிரதிநிதி ஹீத் சுலர், நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான போரில் வெற்றி யடைந்தமைக்காக இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டுவதாகக் கூறியதுடன் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில், தொலைத் தொடர்பு வசதி, வங்கி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டு சிறந்த முறையில் பணிகள் இடம்பெறுவதாகவும் அதற்காக அரசாங்கத்தைப் பாராட்டுவதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் இந்த மக்களுக்கான நலன்களில் சர்வதேச சமூகம் நேரடியாக உதவ முடியுமென்று தெரிவித்த அவர், கண்ணி வெடிகளை அகற்றி மக்களைத் தமது சொந்தக் கிராமங்களில் மீளக் குடியமர்த்தும் பணியைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென்றும் கூறினார். முகாம்களில் உள்ள மக்களுடன் தாம் உரையாடியதாகவும் அவர்கள் விரைவில் சொந்த இடம் செல்ல விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு அமெரிக்கா முட்டுக்கட்டை போடுவதாகத் தெரிவிக்கப்படுவது குறித்துச் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதில் அளித்த அவர், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு இந்தக் கடன் மிகவும் அவசியமானது எனக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • chandran.raja
    chandran.raja

    புலிபினாமிகளின் “பொய்” பிரச்சாரம் உடைந்து நொருங்குகிறது. நலன்புரி நிலையங்களில் இருப்பவர்களின் வசதி வாய்ப்புகளை பெருக்குவதற்கும் தங்கள் வாழ்விடங்களுக்கு கூடியகெதியில் திரும்புவதற்கும் ஒருமித்துக் குரல் கொடுப்போம்.

    Reply