கிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

paddy.jpgகிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேற்படித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தி லுள்ள சபை கமநல சேவைப்பிரிவுகளிலும் நீண்ட காலமாக கவனிக்கப்படாதிருந்த 1800 சிறிய குளங் கள் இவ்வருட இறுதிக்குள் புனரமைப்புச் செய் யப்பட்டு அடுத்த வருட சிறுபோக நெற் செய்கையின் போது நீர்ப்பாசன வசதிகள் வழங்கப் படுவதோடு மேட்டு நிலப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுபவர்களுக்கும் நீர்ப்பாசன வசதிகள் வழங் கப்படவுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதே நேரம் கிழக்கு மாகாணத்திலுள்ள பெரிய நீர்ப்பாசனத் திட்டத்திலுள்ள குறைபாடு களை நிவர்த்தி செய்து வாய்க்காலை புனரமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியும் கிடைத்துள்ளது. இதன் மூலம் லகுகலைக்குளம் அபிவிருத்தி செய்யப்பட்டு வாய்க்காலும் புனர மைக்கப்படவுள்ளன.

இதே போன்று பன்னல்கம நீர்த்தேக்கமும் புனரமைக்கப்படவிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பகுதியிலுள்ள குளங்கள் திருத்தம் செய்யும் வேலைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நீர்ப்பாசன வசதிகள் அபிவிருத்தி செய்யப்படும் போது விவசாய நடவடிக்கைகளும் விஸ்தரிப்ப தற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மல்வத்தை, கரடியனாறு விவசாயப்பண்ணைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு விதை நெல் உற்பத்தியும் அடுத்த பெரும் போகத்திலிருந்து அதிகரிக்கப்படவிருக்கிறது.

இது தவிர மூன்று மாவட்டங்களிலும் விதை நெல் சுத்திகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கக் கூடிய ஏற்பாடுகளும், நெல் சந்தைப்படுத்தும் சபை கிழக்கில் பல முக்கிய இடங்களில் பாரிய களஞ்சியங்களை அமைக்கும் வேலைகளையும் மேற்கொண்டு வருகிறதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *