பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப்பட்டமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
வடக்கை மீட்பத்தற்கான இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது இலங்கை படையினர் யுத்தக் குற்றங்களை புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் நடத்தப்பட்ட இறுதிக் கட்ட யுத்தத்தில் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நடவடிக்கைகள் மனித உரிமைகள் பேரவையின் நம்பகத் தன்மை குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும் எனவும் அவ்வறிகையில் சுட்டிக்காட்டியுள்ள ஐரோப்பிய ஒன்றியம் மனித உரிமை பேரவையினால் வழங்கப்பட்ட இந்த தீர்மானம் யதார்த்தத்திற்கு புறம்பானதென்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்படாகும் என தெரிவித்துள்ளது. மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை பாதுகாப்பதற்கான சகல முயற்சிகளையும் தமது அமைப்பு தொடர்ந்து முன்னெடுக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.