அரசாங்கத் தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட செலசினே தொலைக்காட்சியின் பொறுப்புவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் ஊடகத் துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கடந்த 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
அதன்படி தற்போது வகித்துவரும் அரச தகவல் பணிப்பாளர் நாயகப் பதவிக்கு மேலதிகமாக அனுஷ பெல்பிட்டவுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் தலைவர் போன்ற பதவிகளையும்; அனுஷ பெல்பிட்ட இதற்கு முன்னர் வகித்துள்ளார். பட்டதாரியான அவர் தமது பட்டப்பின் படிப்பை அவுஸ்திரேலியாவில் மேற்கொண்டுள்ளார்