மன்னாரிலிருந்து பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் ஏ 32 வீதியைப் புனரமைக்க 4,950 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவிக்கின்றது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ் 10 உள்நாட்டு ஒப்பந்தக்காரர்கள் நிர்மானப்பணிகளை மேற்கொள்ள உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் ஏ 32 வீதியை 6.2 மீட்டர் அகலம் கொண்டதாக 114.26 கிலோ மீட்டர் தூரத்துக்கு புனரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.