பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களை சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின் பிரகாரம் கவனிப்பதற்கும், ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு அமைய புனர்வாழ்வளிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய எஞ்சியுள்ள சந்தேக நபர்கள் பொலிஸாரிடமோ அல்லது இராணுவத்தினரிடமோ சரணடைவதற்கான காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது இராணுவ முகாம்களிலோ சென்று சரணடையுமாறு அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.