வடக்கு கிழக்கில்; புதிதாக தமது எரிபொருள் நிரப்பும் நிலையங்களை திறக்கவுள்ளதாக இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.
இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தின் 150 எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் நாடளாவிய ரீதியில் தற்போது உள்ளன. மேலும் 300 நிலையங்களை புதிதாகத் திறப்பதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதன்படி ஒவ்வொரு நிலையத்துக்கும் 20 மில்லியன் ரூபா வீதம் இத்திட்டத்துக்கு 6 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Sutha
இதற்குத்தானா இத்தனை உயிர்ப்பலிகள்? வாழ்க இந்தியா. வளர்க இந்திய இலங்கை நட்புறவு.
thevi
எப்ப காங்கேசன்துறை சீமெந்து ஆலைக்கு வரப்போகின்றார்கள்? பெற்றோல் நிலையங்களில் நந்திக்கரையில் சிந்திய குருதியை நிரப்பி விற்பனை செய்யுங்கள்.