தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) நேற்று இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள செட்டிகுளம் நிவாரணக் கிராமத்திற்கு விஜயம் செய்தார்.
மக்களுடன் நேரடியாகப் பேசிய அவர் குறைபாடுகளையும் கேட்டறிந்தார். வவுனியா செயலகத்திற்கு விஜயம் செய்து மாவட்ட அரச அதிபருடன் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அமைச்சர்களான றிசாட் பதியுதீன், அமீர் அலி ஆகியோரும் வந்திருந்தனர்.