காலஞ் சென்ற எம்.பிக்களான அலுக் அலுவிகார மற்றும் க.பத்மநாதன் ஆகியோருக்கு நேற்று சபையில் அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார பாராளுமன்றத்தின் சார்பில் இந்த அனுதாபத்தை சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றம், சபாநாயகர் தலைமையில் நேற்று காலை 9.30 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான ஆரம்ப நிகழ்வின் போதே சபாநாயகர் இந்த அனுதாபத்தைத் தெரிவித்தார்