நேபாளத்தில் மூத்த கம்யூனிஸ அரசியல்வாதியான மாதவ் குமார் நேபாள் நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
நேபாளத்தில் பிரதமர் பதவியில் இருந்து பிரசண்தா பதவி விலகியதை ஒட்டி உருவான அரசியல் நெருக்கடிக்குப் பின்னர் இந்த பதவியேற்பு நடந்துள்ளது. பிரதமரைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பில் நாடாளுமன்றத்தில் மிகப் பெரியக் கட்சியாக விளங்கும் மாவோயியவாதிகள் கலந்துகொள்ளாமல் போனதை அடுத்து மாதவ குமார் நேபாள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இராணுவத்தின் தலைவரை பதவி நீக்கம் செய்ய முந்தையப் பிரதமர் பிரச்சண்டா செய்த முயற்சியை நாட்டின் அதிபர் ராம் பரன் யாதவ் தடுத்ததை அடுத்து மாவோயியத் தலைவர் பிரச்சண்டா பதவி விலகியிருந்தார்.