ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்

ranil-wickramasinghe.jpgஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ. தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.  நாட்டில் ஜனநாயகத்தையும் ஊடக சுதந்திரத்தையும் நிலைநிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு 10 நாள் விஜயத்தை கடந்த 14 ஆம் திகதி மேற்கொண்ட நிலையிலேயே அவர் நாடு திரும்பியுள்ளார்.

இந்த விஜயந்தின்போது நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக எடுத்துரைத்துள்ளதுடன் நாட்டில் ஜனநாயகத்தையும் ஊடக சுதந்திரத்தையும் ஏற்படுத்துமாறு அவர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *