மும்பை விமான நிலையத்தில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடந்தது. 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பை விமான நிலைய சரக்குப் பிரிவு வளாகத்திற்குள் இன்று காலை 3 ஆயுதம் தாங்கிய கும்பல் உள்ளே நுழைந்து சரமாரியாக சுட்டது.இதில் ஏர் இந்தியா நிறுவன ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 3 பேரும் காரில் வந்ததாக தெரிகிறது. யார் அவர்கள், எதற்காக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து தெரியவில்லை.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.