இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும்: கனடா

kathir-camp.gifஇலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றிக் கிடைப்பதையும், தொண்டு நிறுவனப் பணியாளர்களின் பாதுகாப்பையும் இலங்கை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்று கனடா குரல் கொடுத்துள்ளது.

கனேடிய வெளியுறவு அமைச்சரும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஒரு கூட்டறிக்கையில், சர்வதேச மனிதாபிமான விழுமியங்களுக்கு ஏற்ப இலங்கை அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு நடமாட்ட சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும், சுயவிருப்பத்தோடு தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல விரும்பும் மக்கள் கூடிய விரைவில் திரும்ப இலங்கை அரசாங்கம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் கனேடிய அமைச்சர்கள் கோரியுள்ளனர்.

இலங்கையின் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய அரசியல் நல்லிணக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற ஜனாதிபதியின் வாக்குறுதிகளுக்கு உடனடியாக செயல்வடிவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கனேடிய அமைச்சர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *