இலங் கையிலிருந்து இந்தியா சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு கனகசபை பத்மநாதன் அவர்கள் மதுரையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார் என தெரியவந்துள்ளது. மாரடைப்பு காரணமாக மதுரை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் க. பத்மநாதன் தனது 62 வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது பூதவுடலை, இன்று பிற்பகல் இலங்கைக்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் எதிர்வரும் சனிக்கிழமை, அவரது பூதவுடல், அம்பாறை தம்பிலுவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர், காரைதீவுக்கு மக்கள் அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்படவுள்ளது.
இதன் பின்னர், ஞாயிற்றுக்கிழமை, மாலையில் தம்பிலுவிலுவில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன. 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது, அம்பறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட அவர் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றுக்கு தெரிவானார்.