கொழும்பு மற்றும் ஸ்ரீஜயவர்தனபுர கல்வி வலயங்களுக்குட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுபற்றி கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் எமது இணையத்துக்குத் தெரிவிக்கையில், பயங்கரவாதப் பிடியிலிருந்து நாட்டை முற்றாக மீட்டெடுத்த படைவீரர்களைக் கௌரவிக்கும் முகமாக இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பாராளுமன்ற மைதானத்தில் நடைபெறவுள்ள விசேட வைபவத்தை முன்னிட்டே இப்பாடசாலைகள் மூடப்படவுள்ளன எனக் கூறினார்.