ஜப்பானில் மேலும் 12 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் ஏற்பட்டிருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ஜப்பானில் பன்றிக்காய்ச்சலால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஒசாகா மற்றும் ஹியோகா பிராந்தியங்களை சேர்ந்த பள்ளிக்கூட மாணவர்கள், இவர்களில் ஒருவர் கூட நாட்டை விட்டு வெளியே செல்லவில்லை.
ஜப்பானில் முதன்முதலாக பாதிக்கப்பட்ட நால்வருக்கு வட அமெரிக்காவில் இருந்து பன்றிக்காய்ச்சல் தொற்றியது., மற்றவர்கள் அனைவருக்கும் ஜப்பானுக்கு உள்ளாகவே தொற்றியுள்ளது.