இராணுவத்தைத் தாக்கும் நோக்கில் விரைவாக வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படகுகள் மீது படையினர் நடத்திய தாக்குதல் காரணமாகப் புலிகள் தரப்பில் 70 பேர் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் ஏரியில் இன்று (17) காலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போதே புலிகளின் முக்கிய தலைவரொருவர் உட்பட எழுபது பேர் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.