முசலி 2ம் கட்ட மீள்குடியேற்றம் அடுத்த வாரம் ஆரம்பம்

images-house.jpgஇரண்டாம் கட்ட மீள்குடியேற்ற நடவடிக்கைகள் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்த மக்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் அண்மையில் ஆரம்பித்தது. முற்கட்டமாக முசலி, சவேரியர்புரத்தில் 122 குடும்பங்களைச் சேர்ந்த 409 பேர் மீள்குடியேற்றப்பட்டனர்.

இரண்டாம் கட்ட மீள்குடியேற்றம் கடந்த 11ம் திகதி நடைபெற இருந்த போதும் இறுதி நேரத்தில் அந்த நடவடிக்கை பின்போடப்பட்டது. இதன்படி, 148 குடும்பங்களைச் சேர்ந்த 555 பேர் அடுத்த வாரம் மன்னார் முசலியில் மீள்குடியேற்றப்பட உள்ளனர். ஏனைய மக்களும் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றப்பட உள்ளதோடு டிசம்பர் 31ம் திகதியாகும் போது 80 வீத மீள்குடியேற்றங்களை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *