சித்ரவதைக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் அபுதாபி ராஜ குடும்பத்தவர் கைது

_uae_dubai_.gifஅபுதாபியில், ஒரு நபர் சித்ரவதை செய்யப்படுவதை காட்டும் வீடியோ படம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், அந்நபரைச் சித்ரவதை செய்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அரச குடும்ப உறுப்பினர் ஒருவரை பொலிசார் தடுத்துவைத்துள்ளனர்.

அமெரிக்க தொலைக்காட்சி குழுமமான ஏ பி சி யால் கடந்த மாதம் ஒளிபரப்பப்பட்ட இந்த வீடியோ  படத்தில், ஒரு மனிதன் தாக்கப்பட்டது காட்டப்பட்டிருந்தது. சாட்டையால் அடிக்கப்பட்ட அவர் மீது தீ வைக்கப்பட்டு, இறுதியாக அந்த மனிதர் மீது கார் ஏறிச் சென்றதும் காட்டப்பட்டது. தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரின் பெயர் ஷேக் இசா பின் ஜையன் அல் நஹ்யான். இவர் அபுதாபியின் பட்டம் சூட்டப்பட்ட இளவரசரின் சகோதரர். ஆனால் இவருக்கு அதிகார பூர்வ பணி ஏதும் கிடையாது.

அபுதாபியின் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது முதல் முறையாக இப்போதுதான் விசாரணை நடத்தப்படுவதாக நம்பப்படுகிறது. இந்தப் பிரச்சனை தனிப்பட்ட முறையில் தீர்க்கப்பட்டு விட்டதாக முன்பு அதிகாரிகள் கூறி வந்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *