யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நேற்று (11.05.2009) இரவு 7 மணியளவில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் கொக்குவில் மேற்கு கேணியடியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தங்கராஜா ரதீபன் (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் இவர்மீது துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சடலம் பொலிஸாரினால் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.