அரச கட்டுப்பாடடுப் பிரதேசங்களுக்கு வந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவும் வகையில் சீன அரசாங்கம் ஒரு மில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசாங்கம் உதவி கோரியிருந்தமைக்கு ஏற்பவே அவசர நிவாரண உதவித் தொகையாக சீனா இதனை வழங்கியுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் இதற்கான காசோலையை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவிடம் நேற்று அவரது அமைச்சில் வைத்து கையளித்தார்.