காலியான கதிரைகளுடன் மேதினத்தை கொண்டாடிய தமிழரசுக் கட்சி !
உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் எம்.ஏ. சுமந்திரன் அணியினர் யாழில் தமது பலத்தை காட்ட கூட்டிய கூட்டத்தில் மிகக் குறைந்த ஆதரவாளர்களையே காண முடிந்தது. ஏனைய தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் மேதினக் கூட்டம் மற்றும் பேரணி என விஷப்பரீட்சையில் இறங்காது சுதாரித்துக் கொண்டனர். தமிழரசுக் கட்சியில் யாழிலில் மே தின கூட்டத்தை கூட்டி தனது வாக்கு வங்கியின் இலட்சணத்தை படம் போட்டுக் காட்டி விட்டது.