மதவாச்சி சோதனை நிலையத்தில் பணிபுரிந்த 126 பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம்

sri-lanka-army.jpgஏ9 வீதியில் மதவாச்சி பிரதான சோதனை நிலையத்தில் பணிபுரிந்த 126 பொலிஸார் வேறு பகுதிகளுக்குத் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வடமத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக விஜேதிலகவின் உத்தரவின் பேரில் இவர்களுக்கு இந்த திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கிலிருந்து தென்பகுதிக்கு வருகின்ற வாகனங்களுக்குரிய பாதுகாப்பு நடவடிக்கையில் அனுமதி பாஸ் வழங்கும் நடவடிக்கைகளில் பல மோசடிகள் இடம்பெற்றுவருவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த புகாரையடுத்தே இவர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக இவர்களின் இடமாற்றங்கள் நடைபெற்றுவருவதுடன் புதியவர்கள் அவர்களின் இடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடபகுதியில் இருந்து தெற்கு நோக்கி எந்த வாகனங்களும் வருவதற்கு பாதுகாப்புத் தரப்பினரின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வருவதனால் விசேட அனுமதி பெற்று வரவேண்டும். அதேபோல தெற்கில் இருந்தும் வடக்கு நோக்கி வாகனங்கள் செல்லவும் அனுமதி பெறவேண்டும்.

இந்த பாதுகாப்பு நடைமுறையை மீறி சில வாகனங்களுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு இவர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *