இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு சின்னமுத்து

vavuniyatents.jpgஇடம் பெயர்ந்து வந்து வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் சிலர் சின்னமுத்து நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளவென பூவரசங்குளம் ஆதார வைத்திய சாலை விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நோய்கு உள்ளான மேலும் சிலர் நேற்று (09.05.2009) இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த நோயை கட்டுப்படுத்தும் மருந்து வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளதுடன் முகாம்களில் உள்ள மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மக்களில் சிலருக்கு தோல் சம்மந்தமான தொற்று ஏற்பட்டுள்ளது மருத்துவ பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வவுனியா முகாம்களில் மக்களிடையே பரவக்கூடிய தொற்று நோய் குறித்து ஆராய்வதற்கென வைத்தியர்கள் குழுஒன்றை வவுனியாவிற்கு அனுப்பியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *