கனடா விமான நிலைய துப்பாக்கிச்சூடு தொடர்பில் அல்பிரட் துரையப்பா பேரன் நிஸான் துரையப்பா விளக்கம்

கனடா விமான நிலைய துப்பாக்கிச்சூடு தொடர்பில் அல்பிரட் துரையப்பா பேரன் நிஸான் துரையப்பா விளக்கம்

கனடாவில் பியர்சன் விமான நிலையத்தில் பொலிஸார் சுட்டதில் 30 வயதுடைய நபர் கொல்லப்பட்டுள்ளார். விமானநிலைய புறப்பாடு பகுதி ஒன்றில் இரண்டு தொடக்கம் மூன்று நபர்களை உள்ளடக்கிய சிறு குழுவினருக்கிடையேயான முரண்பாட்டின் போது துப்பாக்கியை பயன்படுத்த முற்பட்ட வேளை அதனை தடுக்க பொலிஸார் சுட்டதாக கூறப்படுகிறது.

விமானநிலையத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றதாகவும் அதன் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் பீல் பிராந்திய தலைமை பொலிஸ் அதிகாரி நிசான் துரையப்பா தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவின் பேரனாவார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையத்தினை அண்டிய சில வீதிகள் மூடப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *