புனித தந்து தாதுவை மறு அறிவித்தல் வரை பார்வையிடுவதை தவிர்க்குமாறு போலீசார் கோரிக்கை!
மறு அறிவித்தல் வரை புனித தந்ததாது கண்காட்சியைப் பார்வையிடுவதற்குக் கண்டிக்கு வருவதனை தவிர்க்குமாறு காவல்துறையினர் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.
அதேநேரம், குறித்த கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக வரிசையில் காத்திருந்த பெண் ஒருவர் நேற்று உயிரிழந்தார். அவருக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலைமையை அடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். அத்துடன் மேலும் சிலர் வெவ்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் வழிபாடுகளுக்காகப் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளமையினால் மறு அறிவித்தல் வரை புனித தந்ததாது கண்காட்சியைப் பார்வையிடுவதற்கு வருவதனை தவிர்க்குமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர். ஏற்கனவே, அதிகளவான மக்கள் வரிசையில் காத்திருப்பதாகவும் காவல்துறையினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.