இலங்கைக்கு ஐ.நா.வின் விசேட தூதுவராக கிளின்டன் அல்லது அனானை நியமிக்குமாறு கோரிக்கை

w_news.jpgஇலங்கைக்கு ஐ.நா. தூதுவராக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனை அல்லது முன்னாள் ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனானை நியமிக்குமாறு அமெரிக்கத் தமிழர்கள் அமைப்பானது ஐக்கிய நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

“ஒபாமாவுக்கான தமிழர்கள்’ என்ற அமெரிக்காவிலுள்ள தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அமைப்பு இக்கோரிக்கையை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் விடுத்திருக்கிறது.

நிலைமையை தெளிவாக ஆராய்ந்து தீர்வு யோசனையை முன்வைக்கக்கூடியவரை விசேட தூதுவராக நியமிக்குமாறு செயலாளர் நாயகத்துக்கு ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக இணையத்தள செய்திகள் தெரிவித்தன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *