இந்திய அரசினால் இடம்பெயர்ந்த மக்களுக்கென அனுப்பி வைக்கப்பட்ட ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் இந்திய அதிகாரிகளால் வவுனியாவில் கையளிக்கப்பட்டன. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி. எம். எஸ். சாள்ஸ் செட்டிக்குளத்தில் வைத்து இதனைப் பெற்றுக் கொண்டார்.
ஏழுலொறிகளில் எடுத்தி வரப்பட்ட இந்த நிவாரணப் பொருட்களில் உணவு வகைகள், உடுபுடவைகள், சமையல் பாத்திரங்கள் அடங்கியிருந்ததென அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கக்கூடிய வகையில் நிவாரணப் பொருட்கள் பொதி செய்யப்பட் டிருந்தன.