அதிகரிக்கும் வெப்பம் மக்களுக்கு எச்சரிக்கை !
இலங்கையில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து காணப்பட்ட போதிலும் நாளைய தினம் வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டளாவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி வடக்கு வடமத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை உயரக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி, கேகாலை, மாத்தளை, பதுளை, நுவரெலியா, ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு 39 – 45 பாகை செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இந்த வெப்பமான காலநிலையில் நீர்ச்சத்து குறைவடைந்து மயக்கம், தலைவலி, உடல் சோர்வு போன்ற உபாதைகள் ஏற்பட கூடும் எனவும், இதற்கு பொதுமக்கள் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும் எனவும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.