முன்னாள் அதிமுக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு பாஜக புதிய தலைவர் !

முன்னாள் அதிமுக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு பாஜக புதிய தலைவர் !

இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு உட்பட 19 மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்துள்ளது. அந்தவகையில் நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி 13வது தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 12வது தலைவராக இருந்த அண்ணாமலைக்கு பாரதிய ஜனதா கட்சியில் தேசிய மட்டத்திலான பதவி கிடைக்க இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

நயினார் நாகேந்திரன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினூடாக இரு தடவைகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அத்துடன் அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை மற்றும் தொழிற்த்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் அதிமுகவிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டார்.

2021 ஆம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். எப்படியாயினும் வருமானத்திற்கு மீறி சொத்துக் குவித்த வழக்கு, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்த சர்ச்சை மற்றும் ஓடியோ றிலீஸ் என பல்வேறு குற்றச்சாட்டுகளையும் நயினார் நாகேந்திரன் எதிர்கொண்டுள்ளார். தற்போது சர்ச்சைகளின் நாயகன் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியை வழிநடத்தப் போகிறார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *