இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கார் சிலை அகற்றல் !
“வேற்றுமையில் ஒற்றுமை “ என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பை வடித்த சிற்பி அம்பேத்கார். அம்பேத்கார் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் பெண்கள் உரிமைகள் மற்றும் சமூக நீதிக்காகவும் பெரும் பங்களிப்பைச் செய்த தலைவர். ஜெய் பீம் என்ற முழக்கத்துடன் தலித் மக்களின் வழிகாட்டியாக விளங்கியவர். இந்தியாவின் முதாலவது சட்ட அமைச்சரும் இவரேயாவார். இந்தியா முழுவதும் மக்கள் அம்பேத்கார் சிலைகளை நிறுவியுள்ளார்கள்.
அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் பதோஹி என்ற கிராமத்தில் அம்பேத்காருக்கு 4 அடியில் அக்கிராம மக்கள் சிலையை நிறுவியுள்ளார்கள். இச்சிலையானது முறையான அனுமதியின்றி நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிறது. அளித்த புகாரையடுத்து பொலிஸார் சிலையை அகற்றியுள்ளனர். ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் சிறுபான்மை இனமக்களும், தலித்துக்களும் மற்றும் சிறுபான்மை மதங்களும் இன்ன பல ஒடுக்குமுறைகளைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் அம்பேத்கார் சிலை அகற்றியதை கண்டித்து அக்கிராம மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தி வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிராமே கொந்தளித்து போய் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாகவே யாழ் கொக்குவிலில் அம்பேக்கர் மற்றும் பெரியாருக்கு சிலை எழுப்பப் போவதாக ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக் குரல்கொடுத்து வருகின்ற அருண் சித்தார்த் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.