முல்லைத்தீவு கரையாமுள்ளி வாய்க்கால் பகுதியில் நேற்று (08.05.2009) புலிகளின் மண்அணை ஒன்று படையினரால் முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளது. பலமணிநேர மோதலை அடுத்தே இந்த மண் அணையை படையினர் மீட்டுள்ளனர். இங்கு இடம்பெற்ற தாக்குதலை அடுத்து நடத்தப்பட்ட தேடுலின் போது புலிகளின் 35 சடலங்களும் பெருந்தொகையான ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.