மாத்தறை வெஹறஹேன விகாரையில் இடம் பெற்ற வெசாக் தான நிகழ்வில் மதிய உணவை உட்கொண்ட ஒன்பது பொலிஸ் கான்ஸ்டபிள்களும், சில அரசு ஊழியர்களும் திடீர் வயிற்று வலி, வயிற்றோட்டம் ஏற்பட்டு மாத்தறை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரசின் தேசிய வெசாக் தின நிகழ்வுகள் இந்த விகாரையில் கடந்த புதன்கிழமை 6 ஆம் திகதி ஆரம்பமானது தெரிந்ததே. இந் நிகழ்வின் போது வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்ட பின்பே இவ்வாறு பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்