ரியூசன் வாத்திகள் பதிவுசெய்ய வேண்டும் !
ஆசிரியர் கவுன்சில் மூலம் பதிவு எண்கள் வழங்கப்படும் ஆசிரியர்களே தனியார் வகுப்புக்களை நடத்தலாம். அதன்படி அரசாங்கம் தனியார் பயிற்சி வகுப்பு ஆசிரியர்களை பதிவு செய்யும் திட்டம் தொடர்பான முன்மொழிவுகளை அமைச்சரவையில் விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி பதிவு செய்யாத ஆசிரியர்கள் தனியார் வகுப்புக்களை நடத்த முடியாது. இதன் மூலம் தனியார் பயற்சி வகுப்புகளை ஒழுங்குபடுத்த முடியும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
தனியார் கல்வி நிலையங்களை நடாத்தும் ஆசிரியர்கள் கிரிமனல் நடவடிக்கைகளிலும் பாலியல் தூஸ்பிரயோகங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவில் தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் தற்சுதன் பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்டமை தெரிந்ததே.