டிஜிட்டல் மயமாகும் குற்றவாளிகளின் தகவல்கள்!
நாட்டிலுள்ள சுமார் 10 இலட்சம் குற்றவாளிகளின் கைரேகைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பொலிஸ் குற்றப் பதிவுப் பிரிவின் (CRD) தகவலின் படி, மேநீதிமன்றத்தில் தண்டனை பெற்ற நபர்களின் கைரேகைகள் டிஜிட்டல் மயமாக்கல் அமைப்பில் உள்ளிடப்பட்டுள்ளன. இந்த செயல்முறையின் மூலம் பல குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.