இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் – ரணில் விக்கிரமசிங்க !

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் – ரணில் விக்கிரமசிங்க !

 

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை எப்போதும் எதிர்த்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க, ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடன் இணைந்து செயற்படுவது சுலபமானதாக காணப்பட்டது. அவர் அனைத்தையும் புரிந்துகொண்டார் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள். மாகாண சபைகளிற்கு அதிகாரங்களை வழங்குங்கள். யார் குற்றவாளி என்றாலும் தண்டியுங்கள். தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள் – இதனை செய்யக்கூடாது. செய்யவேண்டாம் என நான் ஒருபோதும் தெரிவித்ததில்லை. இதன் காரணமாகவே நான் தேர்தல்களில் தோற்றேன். நான் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக குற்றம்சாட்டினார்கள். அது முடிவடைந்ததும் ராஜபக்சாக்களிற்கு ஆதரவளித்ததாக குற்றம்சாட்டினார்கள், என தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *